பாலியல் குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது !
கடந்த 20.03.2026 ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்ற வழக்கில்(POCSO) தொடர்புடைய எதிரி வேலுசாமி, 56/26, த/பெ.வையாபுரி, கவுண்டர் தெரு, மண்மங்கலம், கரூர் மாவட்டம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மேற்படி எதிரியை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ரவிக்குமார், இ.ஆ.ப., உத்தரவின் படி 16.04.2026 ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை தரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்கள் குறித்தும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மைய எண். 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது புகாரை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத். இ.கா.ப., கேட்டுக்கொண்டார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.