சிற்பி வேலாயுதம் : 80 வயதிலும் குன்றாத அர்ப்பணிப்பு !
சேவை, தியாகம், நிலைத்தன்மை ஆகியவற்றை அடையாளமாக கொண்ட தமிழ்நாட்டின் சமூக நலனுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வழங்கிவரும் சிற்பி வேலாயுதத்தின் பொது சேவை, உண்மையிலேயே வியக்கத்தக்கது மற்றும் ஆழ்ந்த ஊக்கமளிப்பது என்பதாக நெகிழ்வோடு பதிவு செய்கிறார், திருச்சி சேவை (SEVAI) தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சேவை கோவிந்தராஜ்.
”பல தசாப்தங்களாக, மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக அவர் உறுதியான குரலாக ஒலித்து வருகிறார். இளைஞர்கள் தங்கள் கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும். அத்துடன், அவர்களைச் சுயசார்பு மிக்கவர்களாகவும் எதிர்காலத்திற்குத் தயாரானவர்களாகவும் மற்றும் தொழில்சார் கல்வி மற்றும் வலுவான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட காந்திய விழுமியங்களில் உறுதியாக நிற்பவர்.
சமூக வாழ்வில் பெண்களுக்கு கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் தலைமைத்துவம் கிடைப்பதை உறுதிசெய்து, அடிமட்ட அளவில் பாலின சமத்துவத்தை அவர் முன்னெடுத்துள்ளார். அவர் தனது 80-வது வயதை நெருங்கும் வேளையிலும், அவரது ஆர்வம் சற்றும் குறையவில்லை. இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் வழிநடத்துவதிலும் அவருக்குள்ள பேரார்வம் இன்றும் அவரது இதயத்திலும் ஆன்மாவிலும் பிரகாசமாக எரிந்துகொண்டிருக்கிறது.” என்பதாக குறிப்பிடுபவர், இவருக்கு பத்ம விருது போன்ற உயரிய கௌரவத்தை வழங்க வேண்டுமென்ற விருப்பத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
– கோவிந்த்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.