காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறைக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 08+02 (Pulzar) இருசக்கர புதிய வாகனங்களை, ஐந்து உட்கோட்களுங்களில் உள்ள தலா இரண்டு காவல் நிலையங்களுக்கு குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து தடுப்பதற்காகவும், மேலும் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதிகளில் ரோந்து அலுவல் புரிவதற்காகவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் (01.04.2025) அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட காவலர்களுக்கு வழங்கினார்.

மேலும், மேற்படி வழங்கப்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள் தற்சமயம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் தற்காலிகமாக இன்று 01.04.2025 முதல் 09.04.2025 வரை தொட்டியம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார்கள் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் பதவியேற்றது முதல் ரவுடிகளை ஒடுக்கும் பொருட்டு 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தும். மேலும் 15 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டும், சட்டம் ஒழுங்கு திருச்சி மாவட்டத்தில் பேணி காக்கப்பட்டு வருகிறது என்றும் தொிவித்துள்ளார்.