திரைவானில் நிலைத்து நிற்கும் சூரியன் இயக்குநர் இமயம் பாரதிராஜா!
“பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா? ” குழந்தை கதாப்பாத்திரத்தின் மூலம் கேள்வி எழுப்ப வைத்து, சாதியச் சமூகத்தைச் சாடிய மகத்தான இயக்குநர் பாரதிராஜா ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார்.
மக்களை சாதியாக கூறுபோட்டு வைத்திருக்கும் சமூகத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் கூறியதுபோல சாதியெனும் தாழ்ந்த படி தமிழருக்கு தள்ளுபடி என்று உலகிற்கு உரக்கச் சொன்ன இயக்குநர் பாரதிராஜா அவர்கள், தமிழர் அனைவரையும் தனது உறவுகளாகவே பார்த்தார். அவரின் கம்பீரமான குரலில் ஒலித்த “என் இனிய தமிழ் மக்களே” என்ற விளிப்பு அதற்கான சாட்சியாக அமைந்திருந்தது.
பலரை நட்சத்திரங்களாக ஒளிரச் செய்து, என்றும் சுடர் விடும் சூரியனாக திரைவானில் நிலைத்து நிற்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எனது இதயப் பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
தமிழ் உள்ளவரை நிலைக்கும் அவர் புகழ்!
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.