பொதுவில் பழங்கள் சத்தானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த பழங்களை எப்படி சாப்பிடுவது என்பதில்தான் போதுமான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியமானது.
வேறு ஏதாவது உணவை எடுத்துக்கொண்டு பிறகு பழங்களை சாப்பிடக்கூடாது. பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம். பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால், பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட ‘பிரட்’ டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் புளித்து, அமிலமாக மாறுகிறது. அதன் உண்மையான சத்தை உடல் கிரகித்துக் கொள்ள முடியாமல் போகிறது. ஆகவே, பழங்களை தனியாக சாப்பிடுங்கள். வேறு ஏதேனும் உணவுடன் சேர்த்து உண்ணாதீர்கள்.
— பேரா.சா.அருள்






Comments are closed, but trackbacks and pingbacks are open.