15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!

0

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் சேர்ந்த லேட் ஆண்டியப்பன் மனைவி முத்துக் கருப்பாயி பெயரில் சுமார் 13 சென்ட்  நிலம் உள்ளது.

2 dhanalakshmi joseph
4 bismi svs

இந்த நிலத்திற்கு இவருடைய மகன் முரளி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பம் செய்தார். இந்த பட்டா மாறுதல் செய்வதற்கு கூடலூர் பிர்க்கா சார் ஆய்வாளர் மணிகண்டன் சுமார் 15,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

பிர்க்கா சார் ஆய்வாளர் மணிகண்டன்
பிர்க்கா சார் ஆய்வாளர் மணிகண்டன்
- Advertisement -

- Advertisement -

இது குறித்து முரளி தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடலூர் வடக்கு காவல் நிலையம் அருகே சர்வேயர் மணிகண்டன் 15,000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன், ஆய்வாளர் ஜெயப்பிரியா, உள்ளிட்ட போலீசார் கைது செய்து தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.