இந்தப் பட ரிலீஸ் தினத்தன்று தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தலையில்லாத கருப்புச் சிலை, கையில் இருப்பது என்னவென்று தெரியாத அளவுக்கு அந்த விளம்பரம் இருந்தது.
இந்தியாவிலிருந்து விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை வெள்ளைக்காரன் ஒருவன் இங்கிலாந்துக்கு கொண்டு போனான். நல்ல மார்க்கெட்டில் அதை விற்க முடியாததால், கள்ளமார்க்கெட்டில் விற்க முயற்சிக்கிறான்.