அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! – ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! -ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன் விளக்கம்!

ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிஹரன் என்பவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வந்தது
இந்த நிலையில் தனக்கும் ரெய்டுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிகரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இது குறித்து நம்மிடம் விளக்கமாக பேசிய ஹரிகரன்” எனக்கும் அந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்னுடைய வீடு கோயம்பேடுவில் உள்ள ஐ ஏ எஸ் , ஐ .பி .எஸ் அதிகாரிகள் வசிக்கும் தாய்சாவில் உள்ளது அங்கு மத்திய அரசின் பெட்ரோலியத்துறையில் பணி புரியும் உயர் அதிகாரியான ஒரிசாவை சேர்ந்த மண்டேல் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அவருடைய வீட்டில் தான் ரெய்டு நடந்துள்ளது என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் என்னுடைய வீடு என்பதால் தொடர்ச்சியாக என்னுடைய பெயரை தவறாக பரப்பி வருகிறார்கள்.

Admission Enquiry Form

நான் தற்போது மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குனராக உள்ளேன் எனக்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை ” என்றார்.

இந்த ரெய்டு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசினோம்” ‘ மத்திய அரசின் பெட்ரோலிய துறை நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர் மண்டேல் ஒரசாவை சேர்ந்தவர் அவர் தான் சென்னை விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பெட்ரோலிய துறையின் தலைவராக உள்ளார் .

அவருடைய தொடர்பில் இருந்த சிலர் வெளி நாடுகளில் பணப்போக்குவரத்து செய்துள்ளனர். மிகப்பெரிய தொகை என்பதால் கடந்த 2 நாட்களாக ரெய்டு நடந்து வருகின்றது. ரெய்டு இன்னும் முடியவில்லை மிகப்பெரிய தலைகள் இதில் சிக்குவார்கள் விரைவில் எல்லாத் தகவல்களையும் வரும் ” என்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.