என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! – ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! -ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன் விளக்கம்!

ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிஹரன் என்பவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வந்தது
இந்த நிலையில் தனக்கும் ரெய்டுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிகரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

இது குறித்து நம்மிடம் விளக்கமாக பேசிய ஹரிகரன்” எனக்கும் அந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்னுடைய வீடு கோயம்பேடுவில் உள்ள ஐ ஏ எஸ் , ஐ .பி .எஸ் அதிகாரிகள் வசிக்கும் தாய்சாவில் உள்ளது அங்கு மத்திய அரசின் பெட்ரோலியத்துறையில் பணி புரியும் உயர் அதிகாரியான ஒரிசாவை சேர்ந்த மண்டேல் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

Apply for Admission

அவருடைய வீட்டில் தான் ரெய்டு நடந்துள்ளது என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் என்னுடைய வீடு என்பதால் தொடர்ச்சியாக என்னுடைய பெயரை தவறாக பரப்பி வருகிறார்கள்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

நான் தற்போது மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குனராக உள்ளேன் எனக்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை ” என்றார்.

இந்த ரெய்டு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசினோம்” ‘ மத்திய அரசின் பெட்ரோலிய துறை நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர் மண்டேல் ஒரசாவை சேர்ந்தவர் அவர் தான் சென்னை விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பெட்ரோலிய துறையின் தலைவராக உள்ளார் .

அவருடைய தொடர்பில் இருந்த சிலர் வெளி நாடுகளில் பணப்போக்குவரத்து செய்துள்ளனர். மிகப்பெரிய தொகை என்பதால் கடந்த 2 நாட்களாக ரெய்டு நடந்து வருகின்றது. ரெய்டு இன்னும் முடியவில்லை மிகப்பெரிய தலைகள் இதில் சிக்குவார்கள் விரைவில் எல்லாத் தகவல்களையும் வரும் ” என்றனர்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.