அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு – சீறாதே… சிந்தி…

திருச்சியில் அடகு நகையை விற்க

சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் கையாளப்படும் ‘தமிழ்’ என்ற சொல் தனியாக மொழியினை மட்டுமல்லாது மக்கள் – தமிழர், நாடு – தமிழ் மொழி புழங்கும் நாடு எனப் பல்வேறு பொருள்களில் இடம் பெறும். “தமிழ்நாடு“ என்ற சொல் சிலப்பதிகாரத்தில்தான் முதன் முதலில்  தெளிவாகப் பதிவு செய்துள்ளது. அதற்கு முன்னரே தமிழ்நாடு என்ற சொல் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் எனினும் அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இளங்கோ அடிகள் பின்வரும் பாடலில் “தமிழ்நாடு“ என்ற சொல்லினைப் பதிவு செய்கின்றார்.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”(சிலப்பதிகாரம்: காட்சிக் காதை)

மேலுள்ள பாடலில் சேரநாட்டு தளபதி வில்லவன் கோதையின் கூற்றாக மேற்படி வரிகள் அமைந்துள்ளன. சேரன் செங்குட்டுவன் வடக்கே ஆரிய நாடுகளுக்குக் கண்ணகிக்குக் கல்லெடுக்கப் போகும் போது, ஆரிய மன்னர்களை எவ்வாறு எதிர்கொள்வது என அமைச்சரவையிடம் கலந்துரையாடும் போது, தளபதி ` கடலால் சூழப்பட்ட இந்த நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர் யார்?` எனக் கூறுவதாக இளங்கோ அடிகள் காப்பியத்தில் கூறியுள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சிலப்பதிகாரத்தில் வேறொரு இடத்திலும் “தமிழ்நாடு“ என்ற சொல்லினைக் காணலாம்.

“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்

செருவேட்டுப் புகன்று எழுந்து

மின்தவழும் இமய நெற்றியில்

விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்” (சிலப்பதிகாரம் – வாழ்த்துக் காதை) சேரன் செங்குட்டுவன் இமய மலையில் தமிழரின் வீரச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்று கூறும்போது அமைவதாக இப்பாடல் அமைகின்றது.

சங்க இலக்கியமான பரிபாடலிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்

நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றமுண் டாகு மளவு.” (பரிபாடல்)

‘பாண்டிய மன்னனின் பொதியில் மலையிருக்குமளவும் மதுரை

தமிழ் நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்ற மாட்டாது’ என்ற பொருளில் மேற்படி பரிபாடல் அமைந்துள்ளது.

இங்குள்ள முதன்மையான செய்தி என்னவென்றால் தமிழ்நாடு என்ற சொல் ஒரு வகையில் எல்லைப்படுத்தப்படுகின்றது; அதாவது தமிழ்மொழி புழங்கப்படும் இடமே தமிழ்நாடு என இப்பாடலின் மூலம் அறியலாம். சங்க இலக்கியமான பரிபாடலினைச் சிலப்பதிகாரத்திற்குப் பின் ஏன் குறிப்பிடுகின்றோம் என்றால், சங்க இலக்கியங்கள் ஒரு தொகுப்பு, அவை யாவும் ஒரே காலத்தில் படைக்கப்பட்டவையல்ல. குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பரிபாடல், கலித்தொகை ஆகியனவும், பத்துப்பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையும் காலத்தால் பிற்பட்டவை என்பது அறிஞர்கள் கருத்து.

பேரா கா.சிவத்தம்பி அவர்கள் தனது நூலான `சங்ககாலக் கவிதையும் கருத்தும்` என்ற நூலிலும்; 2009ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையான “பரிபாடல் கிளப்பும் பிரச்சனைகள்“ என்ற கட்டுரையிலும் இது பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். கமில் ஸ்வெலபில் போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்களும், சுபவீ போன்ற தமிழ்நாட்டு அறிஞர்களும்கூட இதே கருத்தினைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பரிபாடலினை (கலித்தொகை, திருமுருகாற்றுப்படை என்பவற்றையும்) பக்தி இயக்கக் காலத்தின் தொடக்கக் காலப் படைப்பாகவே கொள்வார்கள். எது எவ்வாறாயினும் பரிபாடல் சங்க இலக்கியமாகத் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்பது தெளிவானது.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் என்பவரும் `தமிழ்நாடு` என்ற சொல்லினைப் பதிவு செய்யத் தவறவில்லை. “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது தொல்காப்பிய நூற்பா. இங்குக் கேள்வியும் பதிலும் குழப்பமில்லாமல் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். தொல்காப்பியக் கால நூற்பாவான இதற்குக் கி.பி.11ஆம் நூற்றாண்டில் இளம்பூரணர் உரை எழுதுகின்றார்.

“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“

மேற்கூறியவாறு `உன்னுடைய நாடு எது எனில் தமிழ்நாடு` என்று கூற வேண்டும் என இற்றைக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே இளம்பூரணர் கூறியுள்ளார்.

கம்பரும் தனது கம்பராமாயணத்தில் `தமிழ்நாடு` என்ற சொல்லினைக் குறித்துள்ளார்.

“துறக்கமுற்றார் மனமென்ன துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை

மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி

உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” (கிட்கிந்தா காண்டம் நாட விட்டப் படலம்-30)

சுக்ரீவன் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் சீதையினைத் தேடி இலங்கை நோக்கிச் செல்லுமாறு கூறும்போது தமிழ்நாட்டினைக் கடந்து செல்லவேண்டும் எனக் கூறுவதாகக் கம்பன் பதிவு செய்கின்றார். இன்று இராமரை முன் நிறுத்தி அரசியல் செய்பவர்களே பெரும்பாலும் தமிழ்நாடு என்ற சொல்லாடலை வெறுக்கும் நிலையில் கம்ப இராமாயணத்திலேயே தமிழ்நாடு என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

சைவச் சமயம் சார்ந்த சேக்கிழாரும் பின்வரும் பாடல்களில் தமிழ்நாட்டினைப் பதிவு செய்தே சென்றுள்ளார்.

“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்” (திருநாவுக்கரசு நாயனார் புராணம்)

“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்” (திருநாவுக்கரசு நாயனார் புராணம்)

“செந்தமிழ்த் திருகா டெய்தி” (காரைக்கால் அம்மையார் புராணம்)

“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” (திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்)

இவ்வாறு மேலும் பல இடங்களில் சேக்கிழார் ‘தமிழ்நாடு’ எனப் பதிவு செய்துள்ளார். ஒட்டக்கூத்தர் எனும் புலவரும் தனது தக்கையாகப் பரணியில் பின்வருமாறு பாடுவார்.

“கங்கை துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்” (இராசராச சோழனுலா : 189)

இக்காலப் பகுதிகளிலெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மற்றும் குறுநில மன்னர்களின் நாடுகள் எனப் பல நாடுகளிருக்க ஏன் இவை யாவற்றையும் “தமிழ்நாடு“ எனப் பழம் புலவர்கள் அழைத்தார்கள்? மொழி வழித் தேயங்கள், மொழி வழி மாநிலங்கள் பிற்காலத்தில் உருவாகப் போவதனை முன்கூட்டியே அறியும் ஆவதறிவார்கள் (தீர்க்கதரிசிகள்) ஆக இருந்தார்களா! எது எப்படியோ “தமிழ்நாடு“ என்ற சொல் தமிழர்களுடன் பிணைந்தே இருந்து வருகின்றது.

இந்திய விடுதலைக்குப் பாடிய பாரதியாரும் தமிழ்நாட்டினைக் குறிப்பிட்டே சென்றுள்ளார்.

” செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே” (பாரதி)

“தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே ” (பாரதி)

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க மாநில அரசினை 1967இல் கைப்பற்றிய பின்னரே இப் பெயர் மாற்றம் நடைபெற்றது. இவ்வாறு அதிகார முறையில் வைக்கப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற பெயரே சீமானுக்குக் கசக்கின்றது. அண்ணாதான் பெயர் வைத்தாரா? என்று பகடி பேசுகின்றனர். நாக்பூர் பிஸ்கெட்டுக்கு வாலையாட்டும் நன்றியுள்ள விலங்கின் பெயர்தான் நினைவுக்கு வருகின்றது.

திமுகழகம்
மாநில அரசில்
பொறுப்பேற்றது 1967ல்.

சட்டசபையில்
“தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்து 1968ல்.

அதன் பின்னரே
“மெட்ராஸ் மாகாணம்” என்பது

1969ல் சட்ட முன் வடிவு மூலமாக

“தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம்

அரசிதழில்
பதிவாகி

சட்டப்படியான நடைமுறைக்கு
கொண்டு வரப்பட்டது.

மேலும், இந்தியத் தேசியத்திற்காகக் கவிதைகள் பாடிய பாரதி, தமிழ்த்தேசியத்திற்காகப் போராடுகிறேன் என்று சொல்லும் சீமானுக்கு, பாரதி எப்படிப் பாட்டன் ஆவார் என்பது தனியான ஒரு கேள்வி.

—  சிறப்பு செய்தியாளர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.