அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அற்ப அதிகாரவர்க்கம் செய்யும் எதேச்சதிகாரம், எவ்வளவு கொடுமை ! உரிமைக்கு போராடும் ஆசிரியர்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நண்பர்கள் இதைப் பகிர்ந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் Raj Mohan அவர்களுக்கு வணக்கம்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

என் பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி எனும் பெயரில் எழுதி வருகிறேன். கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில் ஐந்தாண்டு பட்டயப் படிப்பாக ஓவியம் பயின்றேன்.

மொழிபெயர்ப்புக்காகவும் சிறார் இலக்கியத்திற்காகவும் இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருதும் ஐந்துமுறை தமிழ்நாடு அரசு விருதும் பெற்றிருக்கிறேன். மூன்று சிறார் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறேன். முப்பது ஆண்டுகளாக பத்திரிகை பதிப்பகம் சார்ந்து செயல்பட்டு வருகிறேன்.

யாவரும் கேளீர்

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதி, செண்டங்காடு (பட்டுக்கோட்டை வட்டம்) அரசு உயர்நிலைப் பள்ளியில் 25/11/2019 அன்று ஓவிய ஆசிரியராக (சிறப்பாசியராக) பணியில் இணைந்தேன். 30/06/26ல் எனக்குப் பணி ஓய்வு. ஆயினும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால் அடுத்த கல்வியாண்டுவரை (பத்து மாதங்கள்) பணியாற்றலாம் என்பது அரசு விதி.

எனவே, 05/06/26 அன்று மறு நியமனத்துக்காக, பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். தஞ்சை CEO விடுப்பில் இருக்கிறார். எனவே திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியா தஞ்சைக்கு பொறுப்பு CEO ஆக இருக்கிறார்.

இதில் இனைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை நேற்று திருமதி சுகப்பிரியா என் பள்ளி மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கிறார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து, பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்திடக் கோரினார். நான் அவகாசம் கேட்டு பள்ளியிலிருந்து வெளியேறினேன்.

பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிப்படைய மாட்டார்கள் என்று சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார். மறு நியமனம் என்பது என்போன்ற அரசுப் பள்ளி கலையாசிரியர்களின் உரிமை. இதை திருமதி சுகப்பிரியா துச்சமாகப் புறக்கணிக்கிறார்.

நான் நூலகப் பாடவேளையும் ஓவியப் பாடவேளையும் சேர்த்துதான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பார்த்து வருகிறேன். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 81. நான் பணியில் சேரும்போதே நூறுக்கும் குறைவான மாணவர்கள்தான் இருந்தார்கள்.

நான் இது குறித்து சென்னையில் உள்ள கல்வித்துறை சார்ந்த அதிகாரியிடம் பேசினேன். அவரும் அவரது உயர் அதிகாரியும் திருமதி சுகப்பிரியாவிடம், “இதை நீங்கள் மறுக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கான மறு நியமனம் என்பது அரசு நடைமுறைதான்” என்று மிகவும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள்.

ஆனால் திருமதி திருவாரூர் CEO சுகப்பிரியா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார்.

“நான் எந்த சிறப்பாசிரியருக்கும் மறு நியமனம் கொடுத்ததில்லை. செண்டங்காடு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஓவிய ஆசிரியர் பற்றி கருத்து கேட்டுவிட்டுதான் முடிவெடுத்தேன்” என்று திருமதி சுகப்பிரியா சொல்லியிருக்கிறார்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

ஒன்று, கலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது மறு நியமனம் என்பது மிக எளிய நடைமுறை. இதை திருமதி சுகப்பிரியா எதேச்சாதிகாரமாக மறுக்கிறார்.

இரண்டு, பள்ளியில் என் செயல்பாடு சரியில்லை என்றது என் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய பழிச்சொல். திருமதி சுகப்பிரியா எனக்கு இழைத்த கொடும் அவமானம்.

மாரிமுத்து
மாரிமுத்து

நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். எவர் வேண்டுமானாலும் என் பள்ளியின் ஒவ்வொரு மாணவரிடத்திலும் என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

தலைமை ஆசிரியரிடம்,”பள்ளியில் என் செயல்பாடுகள் சரியில்லை என்று திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியாவிடம் சொன்னீர்களா?” என்று கேட்டேன். நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. என் போனை வேண்டுமாலும் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளலாம்” என்று அவர் சொன்னார். இத்தனைக்கும் தலைமை ஆசிரியரும் நானும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மறு நியமனத்துக்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்ததே அவர்தானே!

அப்படியென்றால் திருமதி சுகப்பிரியா பொய் சொல்கிறாரா?

கல்வித்துறை அதிகாரி, மறு நியமனம் கோரியும் இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டும் திருமதி சுகப்பிரியா மீது வழக்குத் தொடுங்கள் என்று ஆலோசனை சொன்னார். வழக்கு நடத்தும் அளவுக்கு எனக்கு வசதியில்லை.

நான் மொத்தம் ஆறு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் மட்டுமே பள்ளியில் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கான மறு நியமனத்தை திருமதி சுகப்பிரியா மறுப்பது முறைகேடு.

நான் பிழைப்புக்காக இதைக் கேட்கவில்லை. என் உரிமை அபகரிக்கப்படுவது, சர்வாதிகாரமாக உதாசீனப்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது.

ஓவிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, கலையாசியர்கள் மீதான திருமதி சுகப்பிரியாவின்  அலட்சியத்தையே காட்டுகிறது.

ஓவிய, நூலக ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்றால் காலங்காலமாக அரசுப் பள்ளிகளில் ஏன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த விஷயத்தில் மௌனமாக இருந்தால், எனக்குப் பின் ஓய்வு பெறும் கலையாசிரியர்களும் மறு நியமனத்துக்குத் தகுதியற்றவர்களாகப் புறக்கணிக்கப்படுவார்கள் எனும்  அச்சமும் ஏற்படுகிறது.

எனவே மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள், திருவாரூர் CEO  திருமதி சுகப்பிரியா எனக்கு அளித்த மறு நியமன நிராகரிப்பு ஆணையை ரத்து செய்து எனக்கு அடுத்த கல்வியாண்டுவரை பணிபுரிய உத்தரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

தி. மாரிமுத்து (யூமா வாசுகி)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.