அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் !

0

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் !

 

Trichy ADMK
Trichy ADMK

 

திருச்சி முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான சிவபதியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக  எடப்பாடி பழனிச்சாமி இன்று 28.08.2022 திருச்சிக்கு வருகை புரிந்தார்.விமான நிலையம் அருகே அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்சோதி மற்றும் முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், ஆவின் கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக அவர் தங்கும் பிளாசம் ஹோட்டல் முன்பாக பிளக்ஸ் வைப்பதற்காக ஏராளமாக கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் போலீசார் அனுமதி இல்லாமல் எதையும் வைக்க கூடாது என்று அனுமதி மறுக்கிறார். கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் என்ன செய்வது என்று தடுமாறி நிலையில் திடீர் ஏற்பாட்டாக சின்ன சின்ன பிளக்ஸ்கள் தயார் செய்து அதை கம்பியில் கட்டி கைகளில் உயர்த்தி பிடித்தவாறு எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர்.தொண்டர்களின்.. உற்சாகம் தான் தலைவர்களும் நம்பிக்கை கொடுக்கிறது என்பதை திருச்சி தொண்டர்கள் நிரூபித்துள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.