திருச்சி மாவட்ட சுகாதார துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும்.
இப்பணியிடங்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிரப்பப்படவுள்ளன.
நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்-1 (Special Educator for Behavioral Therapy – Bachelor’s / Master’s Degree in Special Education in Intellectual Disability from a UCG – recognized University) ஒப்பந்த பணியிடத்திற்கான மாதஊதியம் ரூ.23,000/-
தொழில்சார் சிகிச்சையாளர்-1 (Occupational Therapist – Bachelor’s / Master’s Degree in Occupational Therapy from a recognized University) பணியிடத்திற்கான மாதஊதியம் ரூ.23,000/- (மற்றும்)
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சமூகசேவகர் -1 (Social Worker – Master of Social Work (MSW) பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,800/இப்பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/notice category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர், அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரிக்கு 31.01.2025–க்குள் நேரிலோ அல்லது பதிவுதபால் மூலமோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.