திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…
C.T.பைஜு,45/20,
S/O தாமஸ்,
செறுவாத்தூர் ஹவுஸ்,
அதானி(PO), திருச்சூர்,கேரளா மாநிலம்..
என்பவர் கடந்த 03.10.2020-ம் தேதி முதல் திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் காவல் நிலைய சரகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜசுகம் ஹோட்டலில் (அறை எண்-109) தங்கியிருந்துள்ளார்.
இன்று காலை முதல் வரை அறை கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று 08.10.2020-ம் தேதி 3.00 மணிக்கு உடலை கைப்பற்றிய கன்டோன்மென்ட் போலிசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து
வருகின்றனர்..
விசாரணையில் இறந்த நபர் மீது 29 9 2020 அன்று காணாமல் போனதற்கான புகார் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது