திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!
திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள செய்தியில்,
- மாணவி உயிரிழந்த தகவலை பெற்றோருக்கும் உறவினருக்கும் காலத்தாமதமாக தெரிவித்ததன் நோக்கம் என்ன ?
- காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விடுதியில் தடயங்களை அழித்து அவசரமாக மாணவியை மருத்துவமனையில் சேர்த்ததன் பின்னணி என்ன ?
- உயிரிழந்த அன்றே அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது யாரை பாதுகாக்க..?
- பள்ளியில் மாணவி உயிரிழந்த பின்பும் எந்தவித கவலையும் பதட்டமும் இல்லாமல் வழக்கம் போல் பள்ளி இயங்கியது எப்படி ?
- மாணவி எழுதியதாக சொல்லப்பட்ட கடிதத்தில் முன்னுக்கு பின் முரணான பல்வேறு குளறுபடிகள்..
தமிழ்நாடு அரசே ! பள்ளி கல்வித்துறையே!
- பள்ளி நிர்வாகத்தினர் அனைவரையும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்து.!
- மாணவியின் உறவினர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்து.!
- விடுதிகளில் தொடரும் மாணவிகளின் மர்மமான மரணங்களை உடனடியாக தடுத்து நிறுத்து.!
- பள்ளி மற்றும் விடுதிகளில் மாணவர் மாணவியர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்து.!
போன்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கும், பள்ளி கல்விதுறைக்கும் மக்கள் அதிகாரம், திருச்சி சார்பாக முன் வைத்துள்ளனர்.