அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!
2025 – 2026 ஆம் கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு செய்தி
தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026 ஆம் ஆண்டு 19.06.2025 முதல் நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகளுக்குக்கான காலி பணியிடம் உள்ள தொழிற்பிரிவுகள் கீழ்கண்டவாறு:
கடந்த ஆண்டு முதல் இருபாலர்கள் படிக்ககூடிய பொறியியல் பாட பிரிவு (10 ம் வகுப்பு தேர்ச்சி – இரண்டு வருட பயிற்சி) : கம்மியர் மின்னணுவியல்(Electronic Mechanic), இயந்திர வேலையாள் (Machinist) (இரு பாலர்கள்) ; கம்பியூடர் பாட பிரிவு (10 ம் வகுப்பு தேர்ச்சி – ஒரு வருட பயிற்சி) : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA) , டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர் (DTPO), பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள் (Multimedia Animation & Special Effects), சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு (English and Tamil) சுயத்தொழில் பாட பிரிவு (8 ம் வகுப்பு தேர்ச்சி – ஒரு வருட பயிற்சி) ஆலங்கார பூ தைத்தல் தொழில்நுட்பம் (EMBROIDERY), ஆடை வடிவமைத்தல் (DRESS MAKING) (பெண்கள் மட்டும்)
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக முகவரி
திருமதி. வே.தமிழ்ச்செல்வி, பி.இ.,
முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ,
தாப்பாய் ரோடு,
புள்ளம்பாடி,
திருச்சிராப்பள்ளி – 621 711.
மின்னஞ்சல் முகவரி – govtitiwpullambadi@gmail.com
இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.