நியூஸ் பேப்பர் ஏன் இவ்வளவு பெருசா இருக்கு ?
காலையில எழுந்த உடனே காபியோட நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனா பஸ்லயோ, ட்ரெயின்லயோ உட்கார்ந்துகிட்டு அந்த பேப்பரை முழுசா விரிச்சுப் படிக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு நமக்குத் தெரியும்.
என்னைக்காவது ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா… ஒரு சின்ன புத்தகம் மாதிரி சுலபமாகப் படிக்கக்கூடிய அளவுல இல்லாமல், ஏன் நியூஸ் பேப்பரை மட்டும் இவ்வளவு பிரம்மாண்டமான சைஸ்ல (Broadsheet) அச்சிடுறாங்க? நிறைய செய்திகள் வர வேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை!
இதுக்குப் பின்னாடி 300 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மாபெரும் ‘வரி ஏய்ப்பு’ ரகசியம் மறைந்திருக்கிறது!
1712-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தித்தாள்களுக்கு ஒரு புதிய வரியை (Stamp Act 1712) கொண்டு வந்தது. அதாவது, ஒரு செய்தித்தாள் எவ்வளவு பக்கங்கள் கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ப அதிக வரி கட்ட வேண்டும் என சட்டம் போட்டார்கள்.
அதிக பக்கங்கள் அச்சடித்தால், அரசாங்கத்திற்கு பெரும் தொகையை வரியாகக் கட்ட வேண்டுமே எனப் பயந்த பத்திரிகை முதலாளிகள் ஒரு பயங்கரமான தந்திரத்தை யோசித்தார்கள்.
பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, உலகத்திலேயே மிகப்பெரிய காகிதங்களை வாங்கி, அதில் அத்தனை செய்திகளையும் மிகச் சிறிய எழுத்துக்களில் அடைத்து, வெறும் 2 அல்லது 4 பக்கங்களில் ஒட்டுமொத்த செய்தித்தாளையும் அச்சடித்து முடித்தார்கள்! சட்டப்படி பக்கங்கள் குறைவு என்பதால் அரசாங்கத்தால் அவர்களிடம் வரி வசூலிக்க முடியவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு அரசாங்கம் அந்த வரியை ரத்து செய்தாலும், மக்களும், அச்சக இயந்திரங்களும் இந்த பிரம்மாண்டமான பேப்பர் சைஸுக்கே பழகிவிட்டார்கள். அதுவே நாளடைவில் உலகம் முழுவதும் ஒரு ‘ஸ்டாண்டர்ட்’ ஆக மாறிவிட்டது.
ஆக, இன்று நாம் மடித்துப் படிக்கச் சிரமப்படும் இந்த நியூஸ் பேப்பரின் அளவு, 300 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பிரிட்டிஷ்காரன் வரியைக் கட்டாமல் ஏமாற்றக் கண்டுபிடித்த ஒரு மாஸ்டர்பிளான்!
உங்களுக்கு இன்னைக்கும் நியூஸ் பேப்பர் தொட்டுப் படிக்கிற பழக்கம் இருக்கா? இல்ல ஸ்மார்ட்போன்லயே எல்லா செய்திகளையும் படிச்சிடுறீங்களா?







Comments are closed, but trackbacks and pingbacks are open.