விளம்பரத்திற்கு உதவும் ! நிரந்தர தீர்வாக அமையுமா?
ஊழல் ஒழிப்பு … லஞ்ச ஒழிப்பு அவசியமானது… கட்டாயமானது… ஆனால், லஞ்ச ஊழல் வழக்கில் தூய்மைப் பணியாளர்கள், வண்டி தள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வீரத்தைக் காட்டக் கூடாது.
கனிமவளத்துறை இயக்குநர், RTO, மருத்துவ இயக்குநர், DSP, தாசில்தார் என்று நடவடிக்கை எடுத்தால், உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.
A, B, C, D என்று அரசுப் பணியாளர்கள் பதவி, சம்பளம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இதில், C, D மற்றும் ஒப்பந்த/தற்காலிக பணியாளர்கள் மீதே நடவடிக்கைகள் பாயும். இது, வழக்கமான நடைமுறைதான், விளம்பரத்திற்கு உதவும். நிரந்தர தீர்வாக அமையாது.
ஆனாலும், உயிருக்குப் போராடும் நோயாளிகளிடம், விபத்தில் தப்பிப்பிழைக்க ஸ்ட்ரெச்சரில் இருப்பவர்களிடமும், உயிரை இழந்து மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்ட உடலை பெறுபவர்களிடமும் 100 ரூபாய், 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
அதற்கு, அந்தப் பணியாளர்கள் அரசுப்பணி நிரந்தரமாக்கப்பட்டு, கெளரவமான ஊதியம் வழங்க வேண்டும். எனவே, TVK MLA நடவடிக்கை தொடரட்டும். A,B,C,D அனைத்து மட்ட அதிகாரிகளையும் கண்காணிப்பு செய்யுங்கள். மாற்றம் கிடைக்கலாம்.
— கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்










Comments are closed, but trackbacks and pingbacks are open.