பள்ளி பணி இட மாற்றத்தால் ஆவேசம் ! கொலை மிரட்டல் விடுக்கும் சபை போதகா் !
தேனி மெயின்ரோடு, டி-கல்லுப்பட்டி, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, முதல்வராக அருளானந்தம் கோவில் பணியாற்றி வருகிறேன்.
எங்கள் திருச்சபை மற்றும் பள்ளிக் கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முழுவதும் நிர்வாக நடைமுறையில் அடிப்படையில் கல்வி முழுவதும் நிர்வாக நடைமுறையின் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை சுமார் 60 நபர்களை பணி இடமாற்றம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் எங்களது கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் சவேரியார் மனைவி சுகந்தி இயற்பியல் ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
சுகந்தி கணவர் ஈ.புதுக்கோட்டை செவன்த் டே அட்வென்டிஸ்ட் சபை போதகராக சுமார் பத்தாண்டுகள் பணிபுரிகிறார். கல்வி நிறுவனத்தின் நிர்வாக நடைமுறையினால் சுகந்தி கணவர் சவேரியார் வேலூர் மாவட்டத்திற்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பணி இடமாற்றத்தை அறிந்த, சுகந்தி சவேரியார் கல்வி நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு கடந்த 25 தேதி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், சுகந்தியின் கணவர் சவேரியார் புரட்சிபாரம் கட்சி என்ற பெயரில் அத்துமீறி போஸ்டர் ஒட்டியும், சுமார் 20 முதல் 25 அடியாட்களுடன் கல்வி நிறுவனத்தில் முற்றுகையிட்டு அத்துமீறி கண்டன ஆர்பாட்டம் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தீ வைத்து கொழுத்தி விடுவோம் என்றும் பள்ளியின் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து ஆபாச வார்த்தைகள் கூறி கோசமிட்ட நபர்கள் அடியாட்களுடன் வந்து தொடர்ந்து வன்முறை குற்ற செயலில் ஈடுபட்டு கல்வி நிறுவனத்தை சேதப்படுத்துகின்றனர்.
மேலும் அவர்கள் PCR வழக்கு பதிவு செய்து யாரையும் சும்மா விடமாட்டோம் நீங்கள் எங்கு சென்றாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகின்றனர். இது சம்மந்தமாக, குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடந்த 25 தேதி தென்கரை காவல்நிலையத்தில் புகார்மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் மீது தற்போது வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே பணி இடமாற்றத்தை காரணம் கூறி தொடர்ந்து வன்முறைசெயலில் ஈடுபட்டு கல்வி நிறுவனத்தை தீ வைத்து கொழுத்தி விடுவோம் என்றும், ஆபாச வார்த்தைகள் கூறி கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், மேலும் கல்வியில் பயிலும் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரிகயர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.