ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்….
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்…
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்…
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்…
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்….
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது… அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்…
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்… காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை…
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்….
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்…
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்…. அதில் குழந்தைகள் 11 பேர்….
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை…
41 பலிக்கு மிக முக்கிய காரணி … அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்… ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை….
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்…. அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்…
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை…
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்… என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா? திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்…..
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்…
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க… நீங்க மட்டும் அனுபவிக்கல… தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்….
மிக முக்கியமாக 65% மக்கள்…
அப்பாவி மக்கள் 41 பேர்…
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல… இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்…
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை….
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்… அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு….Dot
— ஜோக்கே சேகர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.