நேர்மையைக் காப்பாற்ற போராடும் ‘மக்கள் காவலன்’
‘பைசன் காளமாடன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் ‘மக்கள் காவலன்’.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, கே. மணிகண்டன் நடிக்கும் ஃபுல் ஆக்ஷன் படம் இது. சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார்.
மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், இசை : நிவாஸ் கே பிரசன்னா, எடிட்டிங்: அருள் மோசஸ், கலை இயக்கம்: பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி : டான் அசோக்.
“கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்ஷன் டிராமா இது . இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான படம். இது எங்கள் அனைவரின் கனவுப்படம்” என்கிறார் கதையின் நாயகன் மணிகண்டன்.
“அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது. அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது” என்கிறார் சந்தோஷ் குமார்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.