அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோயம்புத்தூர் அரசு அதிகாரிகள் மீது திமுகவினர் காட்டம் – அமைச்சரின் பதில்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய அரசு அதிகாரிகள் பலரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைமை பொறுப்பை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கும் தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருக்கிறது.

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இதில் கலந்து கொண்டு செந்தில் பாலாஜி பேசியது, கோயம்புத்தூர் மாவட்டம் தான் முதன்முதலில் பூத் கமிட்டி அமைத்து தலைமையிடம் கொடுத்திருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்ட திமுகவினர் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி இருக்கின்றனர். மேலும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் கொடிசியா வளாகத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்கும் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இப்படி அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து கொண்டிருக்கும் நாம் கோயமுத்தூரில் உள்ள 100 மாநகராட்சி வார்டுகளையும், மேலும் பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றையும் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார். இன்னும் 75 நாட்களில் தேர்தல்.

யாவரும் கேளீர்

கோயமுத்தூர் மாவட்டத்தில் சில அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.