முன்னேற்றத்திற்கான திட்டமா ? அல்லது முன்னேறாமல் பார்த்துக் கொள்வதற்கான திட்டமா ? ஐபெட்டோ கேள்வி !

விஸ்வகர்மா திட்டத்தின் தமிழாக்கம் உட்பொருள்-அப்பன் தொழிலை அவனது பிள்ளை தவறாமல் செய்ய வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் பொருளடக்கம் இது.

2

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முன்னேற்றத்திற்கான திட்டமா? அல்லது முன்னேறாமல் பார்த்துக் கொள்வதற்கான திட்டமா.? ஐபெட்டோ கேள்வி..!

பாரதப் பிரதமர் அரசின் விளம்பரம் காணீர்! உத்தரவாதம் கேளீர்! முன்னேற்றமா? முன்னேறாமல் பார்த்துக்கொள்வதா?

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

விஸ்வகர்மா சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் முன்னேற்றம் மோடி அரசின் உத்தரவாதம்.

இந்த திட்டமானது நாடு முழுவதிலும் உள்ள பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கும் உலக அளவில் ஒரு புதிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும். – நரேந்திர மோடி, பிரதம மந்திரி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பிரதமமந்திரி – விஸ்வகர்மா திட்டத்தின் நன்மைகள்:

பிரதம மந்திரி விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை

திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மற்றும் ஒரு நாளைக்கு ரூ.500 உதவித்தொகை

ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தொழில்சார்ந்த கருவிகள்

விஸ்வகர்மா சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் ரூ.3 லட்சம் வரை பிணையில்லா கடன்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை.

தரச்சான்றிதழ், பிராண்டிங் போன்ற சந்தைப்படுத்துதலுக்கான உதவி மற்றும் முழுமையடைந்த தயாரிப்புகளுக்கு விளம்பரம்

18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயனடைவார்கள் :

தச்சர், படகு செய்பவர், ஆயுதம் தயாரிப்பவர், கொல்லர், கூடை-பாய்- துடைப்பம் தயாரிப்பவர், தென்னை நார் நெசவாளர், பொம்மை மற்றும் விளையாட்டு பொருள் செய்பவர்கள் (பாரம்பரிய), பொற்கொல்லர், குயவர், காலணி தைப்பவர், காலணி செய்பவர், சுத்தியல் மற்றும் கருவிகளைத் தயாரிப்பவர், சிற்பி (கல் செதுக்குபவர், கல் உடைப்பவர்கள், கொத்தனார், முடி திருத்துபவர், பூமாலை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையற்காரர், மீன் வலை தயாரிப்பவர்கள்.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, விஸ்வகர்மா சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அவர்களுடைய இருப்பிடத்துக்கு அருகே உள்ள பொது சேவை மையத்தை தொடர்புகொள்ளவும்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், குலக்கல்வித் திட்டத்திலிருந்து தமிழ்நாட்டை அன்று காப்பாற்றினார்கள்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் விட்டுச் சென்றுள்ள சுயமரியாதை உணர்வு தமிழ்நாட்டில் இன்னமும் நிலைத்து நிற்கிறது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தலைவர் கலைஞர் அவர்களின் மகன் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தில் உள்ளார்.

விஸ்வகர்மா திட்டத்தின் தமிழாக்கம் உட்பொருள்-அப்பன் தொழிலை அவனது பிள்ளை தவறாமல் செய்ய வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையின் பொருளடக்கம் இது.

விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரையில் தமிழகத்தில் 75 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயனடையும் திட்டமல்ல.

ஐபெக்டோ அண்ணாமலை
ஐபெக்டோ அண்ணாமலை

இவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரும் திட்டமா இது?

குலத்தொழிலை விட்டு வெளியில் வராமல் பார்த்துக்கொள்கிற திட்டமல்லவா?

தேசியக் கல்விக் கொள்கையினைவிட ஆபத்தான திட்டம்?

கல்வி வளர்ச்சிக்கு பயன்படும் திட்டமா இது?

நவீனக் குலக்கல்வித் திட்டத்திலிருந்து தாயகத்தைக் காப்போம்.

SAVE OUR CHILDREN!

SAVE OUR EDUCATION!

SAVE OUR TAMILNADU!

வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்,
AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) ,
தமிழக ஆசிரியர் கூட்டணி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

2 Comments
  1. லோகநாதன் says

    இந்த தொழில்கள் எல்லாம் இல்லாமல் மனிதர்களின் தேவைகள் எப்படி நிறைவேறும் அறிவாளி ஆசிரியரே இது வளர்ச்சி இல்லாமல் வேறு என்ன பிழைப்புக்காக ஏதாவது பிதற்ற வேண்டாம்

    1. முனைவர் பாலசந்திரன் says

      எவரையும் இந்த திட்டம் வலுக்கட்டாயமாக செய்யச் சொல்ல வில்லை. தேவையென்று நினைத்து செய்ய முடிவெடுத்த ஒருவனுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். அவனால் நாடு கடந்த ஏற்றுமதி கூடச் செய்ய இயலும். ஆசிரியர் புரிதலற்று எழுதியுள்ளது தெரிகிறது. பாவம் இவர்.

Leave A Reply

Your email address will not be published.