நகுல் பட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி! இலங்கை நடிகரின் இன்ப அதிர்ச்சி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போலீஸ் பாத்திரத்தில் நகுல் நடித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை  பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி  சென்னை பிரசாத் லேபில் நவம்பர் 04-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் பாலாஜி பேசும்போது,

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

“இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சசிகுமார் சார்  வெளியிட்டார். எனது  முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார்.அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன்.

இந்தப் படம் ரொம்ப  நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது . அதற்காக அவ்வளவு உழைத்துள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நகுலைப்  பல படங்களில் பார்த்திருக்கிறோம்.இதுவரை பார்த்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியான நகுலைப் பார்ப்பார்கள்.

டி3 படம் முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றியது. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.

'தி டார்க் ஹெவன்ஒரு படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அதான் மிகவும் முக்கியம்.. ஏனென்றால் கடவுளுக்கே விளம்பரம் தேவைப்படும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம்  கொண்டு சேர்க்க வேண்டும்.

இதில் நாட்டார் கதையை வைத்து ஒரு த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த த்ரில்லர் வேறு மாதிரியாக இருக்கும்.முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது.

படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம். வேறு வழி இல்லை. மற்றபடி தமிழில் வைக்கக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் கிடையாது.

நகுல் இந்தப் படத்தில் சொன்னபடி எல்லாம்  கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.  இந்தப் படம் எல்லா காவல் தெய்வங்களையும் நினைவுபடுத்தும். சிறுவயதில்  கேள்விப்பட்ட அனுபவங்களை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பட்ஜெட் படமாகத் தான் ஆரம்பித்தது. ஆனால் செலவு ஏழரைக் கோடி தாண்டி விட்டது. இந்தப் படம் நிச்சயமாக தப்பு பண்ணாது. அனைவருக்கும் பிடிக்கும். எனவே இந்தப்  படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம்”என்றார்.

ஹீரோ  நகுல் பேசும் போது,

'தி டார்க் ஹெவன்”நான் சினிமாவிற்கு வந்து இப்போதுதான் முதல் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது.எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு.

நான் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று  இங்கே கூறினார்கள். நன்றி. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன்.இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன்.என்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர்கள் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் .என் நன்றிக்குரியவர்கள் முன்னால் நான் இப்போது நிற்கிறேன்..

சினிமாவில் போலீஸ் என்றால் ராகவன் , அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன.  அந்த வரிசையில் இப்படத்தின்இளம் பாரியும் இருக்கும். நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகின்றேன்.திரைக்கதை  நன்றாக வந்திருக்கிறது.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிளாக  இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது .அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும். இப்படத்தில் நடித்த போது அதைஉணர்ந்தேன்.நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது.

யூனிஃபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக காவல்துறையினர் வேலையே வாழ்க்கையாக இருக்கிறது. அது சுலபமானதல்ல .ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலுடன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித்து ரசித்து செய்கிறேன்”என்றார்.

“தி டார்க் ஹெவன்“
“தி டார்க் ஹெவன்“

நிகழ்ச்சியில்  படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோருடன்படத்தில் நடித்தவர்களும் சின்னத்திரை, யூடியூப் ஏரியாக்களில் பயணிக்கும்  கலைஞர்களான அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண்,கேசவன், பிரதீப்,சிவா ருத்ரன்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.

டி 3 படத்தினால் பட்ட கடனுக்காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்தில் இலங்கையிலிருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்தவரை தேடிப் பிடித்து மீட்டு   தனது அன்புப் பரிசாக அந்தக் காரின் சாவியை இயக்குநர் பாலாஜியிடம் அளித்தார். நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார் பாலாஜி . விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.

 

— மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.