முதல்வர் தங்கிய ஹோட்டலை பேரம் பேசிய எம்.பி மகன் !

0

முதல்வர் தங்கிய ஹோட்டலை பேரம் பேசிய எம்.பி மகன் !

நெற்களஞ்சிய மாவட்டத்தின் வெற்றிலைக்கு பெயர் போன தொகுதியின் எம்.பி-யாக இருந்து வருபவர் பட்டுக்கோட்டை கவிஞரின் பெயரைக் கொண்டவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தொகுதிக்கு விசிட் அடித்தபோது, பட்டுக்கு பெயர் போன சிட்டிக்கு அருகே  அமைந்துள்ள மந்திரமான ரெஸ்டாரண்டில் தங்கிச் சென்றார்.

அந்த ரெஸ்டாரண்ட்க்கு இன்னமும் லைசன்ஸ் கூட அரசு தரப்பில் வழங்கவில்லையாம். காரணம், ரெஸ்டாரண்டின் கட்டட அமைப்பில் பிரச்னை இருப்பதாக கூறி லைசன்ஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த பிரச்னையை சரிசெய்து தருவதாக கூறி எம்.பி-யின் அன்பு மகன் ஸ்ரீ பெயரைக் கொண்டவர், சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளரிடம் பல லட்டுகள் வாங்கிக்கொண்டு லைசன்ஸ் வாங்கித்தருவதில் சிக்கல் நீடித்துக்கொண்டே இருக்கிறதாம்.

ஏற்கனவே மூவேந்தர்களின் ஒருவரின் பெயரை கொண்ட ஹோட்டலை கைப்பற்றியது போல் மதுரை மன்னரின் பெயரைக்கொண்ட மந்திரமான ரெஸ்டாரண்டின் ஓனரிடம்  தங்களிடம் ரெஸ்டாரன்டை ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு  நெருக்கடி செய்து வருகிறராம் எம்.பி-யின் மகன் !

ஆதிரன்

Leave A Reply

Your email address will not be published.