சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்த ஆர்ப்பாட்டம்….

0

சேலம், மே 31- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டகுழு சார்பில் கோட்டை மைதானத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக, உடனடியாக நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய மோடி அரசை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர். குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கிழக்கு மாநகர செயலாளர் கே. பச்சமுத்து, வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார், அமைப்பு குழு உறுப்பினர் ஆர்.வைரமணி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின்  துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.