விராலிமலை அரசு ஆண்கள் பள்ளி இழுத்து மூடும் போராட்டம் அறிவிப்பு!
விராலிமலை அரசு ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் மூன்று ஆசிரியர்கள் ஒரு வருடமாக நிர்வாகத்தை எதிர்த்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை எதிர்த்து மிரட்டியும் வரும் இந்த ஆசிரியர்களை நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கதால்,
பள்ளியை இழுத்து மூடும் போராட்டம் அறிவித்து 15 நாளுக்கு முன்பே அனைத்து துறைகளுக்கும், வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும் இன்னும் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எந்த விதமான முன்னெடும் செய்யாததற்கு காரணம் என்ன?
கல்வித்துறை அதிகாரிகள், தாசில்தார் இடம் கூறி தடை போடுகிறார்களா அல்லது பொதுமக்களையும் பெற்றோர்களையும் போராட்ட விட்டு கைது பண்ணும் திட்டமா? அந்த மூன்று ஆசிரியர்களை தொடர்ந்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி தொடர்ந்து சப்போர்ட் செய்து வருவதன் மர்மம் என்ன?
இன்னும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தேதி குறிக்காததேன் இரண்டு நாள் தான் இடையில் உள்ளது அதற்கான காரணத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள். இதனால் பொதுமக்களிடத்தில் போராட்டம் என்னம் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு முடிவு காண மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? மக்கள் எதிர்பார்ப்பு