வளர்ச்சித்திட்டங்கள் தொடர வாக்களியுங்கள் ! எம்.எல்.ஏ. கதிரவன்!
தமிழக முதல்வர், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் 2.0 தொடக்கத்திற்காக ஏப்ரல் 23 இல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மண்ணச்சநல்லுார் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ. எஸ்.கதிரவன் அய்யம்பாளையம், திருவெள்ளறை, தீராம் பாளையம் ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
“கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அரசியலுக்கு புதியவனாய், உங்கள் பகுதிகளுக்குள் வந்தேன். உங்களுக்கு சொன்ன வாக்குறுதிகளையும், நீங்கள் கேட்காத கோரிக்கைகளையும் கூட என்னால் இயன்ற அளவுக்கு செய்து கொடுத்திருக்கிறேன். அய்யம்பாளையம், திருவெள்ளறை, தீராம்பாளையம் ஊராட்சிகளில், சர்வதேச தரத்தில் சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளேன்.
வறட்சி பகுதியான இப்பகுதியில் குடிநீர் வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆழ்துளை கிணறுகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்து கொடுத்துள்ளேன் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித் தந்துள்ளேன். சமுதாய கூடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.” என்றார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.