ராஜ்மோகனுக்கு கட்டம் கட்டியாச்சு…!
இந்த வழக்கை ஒழுங்காக நடத்தினாலே ராஜ்மோகனின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.எப்படி…?
Representation of the People Act 1951, பிரிவு 123(3)-அடிப்படையில் ‘கோயில், மசூதி, தேவாலயம்’ ஆகிய மதம் சார்ந்த இடங்களை அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும்.
இந்த செயலை ஒரு கட்சியின் வேட்பாளர் செய்தால் அவர் மீது சட்டப்பூர்வமாக FIR பதிவு செய்யலாம். ஒருவேளை, அந்த வேட்பாளர் MLA/MP ஆக வெற்றி பெற்று விட்டால்…?
மேற்சொன்ன மத இடங்களில் பிரச்சாரம் செய்து, அந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் கூட அந்த வெற்றியை நீதிமன்றத்தில் challenge செய்யலாம்.
வேட்பாளர் குறிப்பிட்ட அந்த மத இடத்தில் பேசிய வீடியோ ஆதாரத்தை எதிர்க்கட்சி வேட்பாளர் அல்லது வாக்காளர் நீதிமன்றத்தில் வெற்றியை அறிவித்த 45 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டால், அவரது வெற்றியை நீதிபதி ரத்து செய்துவிடுவார்.
மேலும், அவர் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிப்பதுடன் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிப்பார். நடிகர் விஜய் தனது கையில் முருகனின் ‘வேல்’ பிடித்துக் கொண்டு வேனில் பிரச்சாரம் செய்வது குற்றமில்லையா…?
இதில் சிறிது வித்தியாசம் இருக்கிறது. முருகனின் வேலை வெறுமனே பிடித்திருப்பது விதி மீறல் கிடையாது. ஆனால், கையில் வேலை பிடித்துக் கொண்டு ‘முருகனின் இந்த வேலுக்காக எனக்கு ஓட்டு போடுங்கள்…’, ‘நம்முடைய இந்து மதத்திற்காக எனக்கு ஓட்டு போடுங்கள்..’ என விஜய் பேசியிருந்தால் அவர் மீது நிச்சயமாக FIR பதிவு செய்யலாம்.
சோ, இப்போதைக்கு இந்த வழக்கை சரியாக நடத்தினால் ராஜ்மோகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி தான்
— சேஷாதிரி தனசேகரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.