எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியில் கூலித்தொழிலாளி பலி !
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கன்னய்நகர் பகுதியைச்சேர்ந்த முகித்துள் மண்டல் என்பவரின்
உறவினர் சமீம் மண்டல் என்பவர் மதுரையில் மருத்துவமனையில் கட்டுமான பணிக்காக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மதுரை வந்து ஒப்பந்த தொழிலாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்
கட்டுமான பணிக்காக ஒரு கூம்பு வடிவ குழாயில் மணல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென சாய்ந்ததில் சமீம் மண்டல் மேல்குழாய் விழுந்தது. இதில் சமீம் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவிசி கிச்சை அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சமீம் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியில் இருந்த மேற்கு வங்க கூலிதொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
— ஷாகுல், படங்கள் : ஆன்நதன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.