40 மா.செ.க்களுக்கு சிக்கல் -அதிமுகவில் பரபரப்பு !
வில்லங்கமாகும் அதிமுக மா.செ.க்கள் விவகாரம்..!
தேர்தல் என்றால் பெரும் வில்லங்கம் ஏற்படும் என்பதால் ஏற்கனவே இருந்த மா.செ.க்களையே மீண்டும் மா.செ.க்களாக அறிவித்து மாவட்டச் செயலாளர் தேர்வினை முடித்திருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் இந்த முடிவு தற்காலிகமானது தான். இனிமேல் தான் இருக்கிறது விவகாரம் என்கிறது அதிமுக வட்டாரம்.
தேர்தலின் போது 50-50 என்ற கணக்கில் மா.செ.க்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் ஓ.பி.எஸ். தற்போது தமிழகம் முழுக்க உள்ள மா.செ.க்களில் 75 சதவீதத்தினர் எடப்பாடி யாரின் ஆதரவு பெற்றவர்கள் என்பதால் 50-50 உடன்பாட்டிற்கு மறுத்து, ‘பழைய ஆட்களே இருக்கட்டும்’ எனக் கூறி, தற்போது பொதுக்குழு பணிகளை தொடங்கச் சொல்லியதோடு, பொதுக்குழுவில் கட்சியின் விதிகளை (ஙிசீ-லிகிகீ) மாற்றி முழுஅதிகாரத்தையும் தனக்குள் கொண்டு வரத் திட்டம் வகுத்து வருகிறார் எடப்பாடி.
இது இப்படியிருக்க, பொதுக்குழு முடிந்ததும் முதற்கட்டமாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் யாரெல்லாம் மா.செ.க்களாக இருக்கிறார்களோ அவர்களை அந்தப் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியினர் மூலம் எழுப்ப ஓ.பி.எஸ். திட்டமிட்டுள் ளார். அப்படிச் செய்தால் ஏகப்பட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் சிக்குவார்கள் என்பது தான் அவரின் திட்டம்..!
இதையறிந்த, தேர்தலில் தோற்ற மா.செ.க்கள், எடப்பாடியாரை சரிகட்ட சேலம் இளங்கோவனின் மூலம் தூதுவிடத் தொடங்கியுள்ளனர்