தேனி – மூன்று ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அம்மா உணவகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை !
தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் அம்மா உணவகம். தனியார் ஹோட்டலில் கூடுதல் விலைக்கு ஏழை எளிய நோயாளிகள் வாங்கி சாப்பிடும் அவலம்.
தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் குறைந்த விலையில் இட்லி, சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. இதில் தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் நோயாளிகள் வாங்கி பயன் அடைந்து வந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அம்மா உணவகத்தை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை எளிய மக்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டலில் அதிக விலை கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிடும் அவல சூழ்நிலை நிலவி வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக மூடிக்கிடக்கும் அம்மா உணவகத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.