அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் செய்தி எதிரொலி..! ஷான் கூட்டாளி ஷியாவு போக்சோவில் கைது

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அங்குசம் செய்தி எதிரொலி..! ஷான் கூட்டாளி ஷியாவு போக்சோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, பழைய மசூதி தெரு சேக் முகமது மகன் ஷான்(24) திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து பல பெண்களுடன் சுற்றியதையும், நாகர்கோவில், வெட்டூர்ணிமடம், பரமேஸ்வரன் தெருவை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது வாழ்க்கையை நாசம் செய்ய இருப்பதையும் சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஷான் என்ற நபரை உடனடியாக கைது செய்ய வேண்டி காவல்துறைக்கு புகார் கொடுத்திருந்தனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஷியாவு
ஷியாவு

இந்த செய்தி அங்குசம் மின்னிதழில் வெளியானது. காவல்துறை நடவடிக்கையின் பேரில் இளம்பெண் மீட்கப்பட்டார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்த நிலையில் ஷான் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வேண்டி பீர்முகம்மது என்பவர் கொடுத்துள்ள மனுவில்,
“ஷானின் கூட்டாளிகளான ஷேக்(35), ஷியாவு(21), சல்மான் பாரீஸ்(17), மாலிக்(20), சுலைமான்(27), அப்துல் ரகுமான்(25) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

 

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

அங்குசம் மின்னிதழில் வெளியான செய்தி
அங்குசம் மின்னிதழில் வெளியான செய்தி

இந்த சூழ்நிலையில் ஷானின் கூட்டாளியான ஷியாவு(22) தற்போது நாகர்கோவில் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைதாகி உள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஷானின் கூட்டாளிகள் பெரிய நெட்வொர்க் வைத்துள்ளனர். பல குடும்பப் பெண்கள் இவர்களின் வரையில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷான்
ஷான்

இதுபோன்ற நபர்களின் நடவடிக்கைகளை காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் தனிப்படை அமைத்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.