விருதுநகரில் வெளி மாநில மது பாட்டில்கள் 250 பறிமுதல் முன்னாள் ராணுவ வீரர் கைது !

0

விருதுநகரில் வெளி மாநில மது பாட்டில்கள் 250 பறிமுதல் முன்னாள் ராணுவ வீரர் கைது ! விருதுநகர் அருகே பெரியவள்ளிகுளத்தில் விற்பனைக்கா வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருப்புககோட்டை சாலையில் உள்ள பெரிய வள்ளி குளத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சித்திரகலாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  அங்கு சென்று முன்னாள் ராணுவ வீரரான வீரராஜ் (57)என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

வெளி மாநில மதுபாட்டில்கள்
வெளி மாநில மதுபாட்டில்கள்

பிளாஸ்டிக் டிரம்களில் விற்பனைக்காக வைத்திருந்து 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வீரராஜை கைது செய்து விசாரணை செய்ததில் பாண்டிசேரி மாநிலத்தில் இருந்து லாரி மூலம் பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

மாரீஸ்வரன் 

Leave A Reply

Your email address will not be published.