தீபாவளிப் பண்டிகை – பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி.எண்.84-ல் தொிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் 24.10.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு தொிவிக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும்.

விண்ணப்பதாராின் கடவுச் சீட்டுஅளவுபுகைப்படம்.
விண்ணப்பதாராின் இருப்பிட முகவாிக்கான ஆதாரம்/கடை வைக்கப்படும் இடத்தின் முகவாிக்கான ஆதாரம்)
PAN card/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநா் உாிமம்.
உாிமக் கட்டணம் ரூ.500/ஐ e challan மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துசீட்டு அசல்.
சொந்த கட்டிடம் எனில் பட்டாநகல்/வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம் (பட்டாசுக்கடை  நடத்த சம்மதம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்) /குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட இடத்திற்கான வாி ரசீது இணைக்கப்பட வேண்டும்.
சுய உறுதிமொழிப் பத்திரம்.
கட்டடிட அமைவிட வரைபடம்/கட்டிட திட்ட அனுமதி (A4 அளவில்)

Frontline hospital Trichy

மேற்கண்ட விண்ணப்பங்களை 24.10.2024-க்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
உாிமக் கட்டணம் ரூ.500-ஐ கீழ்க்காணும் IFHRMS அரசுக்கணக்கு தலைப்பில் இணையதளம் வாயிலாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துசீட்டு இணைக்கப்பட வேண்டும்.

Department code 02301

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

District  Tiruchirappalli

DDO Code  15010007

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Account code 007060103AA22799

மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், தற்காலிக உாிம ஆணையையும், நிராகாிக்கப்பட்டதெனில், அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் அனுமதியின்றி/உாிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உாிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்படுகிறது.

இந்நேர்வில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உாிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தைதேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ,ப., அவா்கள் தொிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.