விசிகவிற்கு ஆதரவு தேடி அலைந்த திமுக நிர்வாகி..!
தர்மபுரி மாவட்டத்தில் பொ.மல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவி வி.சி.க-விற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி முதல்வரிடம் இருந்து வந்த அறிவிப்பு திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் வெற்றி பெற்று ஊராட்சித் தலைவராக உள்ள திமுக நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்தச் செய்தி விசிக தலைமை மூலமாக முதல்வர்காதுக்கு போக, முதல்வர் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியான பழனியப்பனை தொடர்பு கொண்டு இருக்கிறார். இதையடுத்து பதறிப்போன பழனியப்பன் ஒவ்வொரு கவுன்சிலரை நோக்கி வீடுவீடாகச் தேடிச் சென்று விசிக-விற்கு ஆதரவைக் கேட்டு வருகிறார். மேலும் வெற்றி பெற்ற நிர்வாகியை ராஜினாமா செய்ய வற்புறுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாது பழனியப்பன் திருமவளவனையும் தொடர்பு கொண்டு இன்னும் ஓரிரு நாளில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.