அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதவத்தூர் பகுதியில் இயங்கி வந்த ஜெயத்ரா போதை மறவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவர் கடந்த 2025-ம் ஆண்டு முதல் மேற்படி ஜெயத்ரா போதை மறவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 10.012026-ம் தேதி ஜெயத்ரா போதை மறவாழ்வு மையத்தின் இயக்குனர் 1.மணிகண்டன் 50/26, த.பெ. தசரத்ராஜ், பாண்டமங்கலம், உறையூர், திருச்சி 2.மணிமாறன் 29/26, த.பெ. சீனிவாசன், மாருதி நகர் எண்.1 டோல்கேட், திருச்சி. 3.பெரியசாமி 34/26. த.பெ. முத்துச்செழியன். அதவத்தூர், ஸ்ரீரங்கம். 4.கிருஷ்ணமூர்த்தி 30/26, த.பெ. மருதை, கூகூர், லால்குடி 5. அறிவுமணி 45/26, த.பெ. செல்லக்கண்ணு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் 6. அபிஷேக் 27/26, த.பெ. மஸ்தான், வனப்பக்குடி, திருவையாறு. தஞ்சாவூர் 7. சூர்யபிரகாஷ் 28/26, த.பெ. பழனியப்பன். அப்பநல்லூர், தொட்டியம் மேற்படி விஜயகுமார் என்பவரை திட்டியும், மையத்தில் வைத்திருந்த தடி மற்றும் குழாய் போன்ற ஆயுதங்களால் விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 12.01.2026-ம் காலை 08.00 மணியளவில் இறந்துள்ளார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இது தொடர்பாக, சோமரசம்பேட்டை கா.நி. குற்ற எண்.21/26, ச/பி. 191(2),191(3). 296(b), 115(2), 118(1), 105, 49 BNS @ 191(2), 191(3), 296(b), 103(1) BNS வழக்கின் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரியான மணிகண்டன் 50/26, த.பெ. தசரத்ராஜ், பாண்டமங்கலம், உறையூர். திருச்சி மாவட்டம் என்பவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப.  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு  07.022026-ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 10 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.