THE WEEK பத்திரிக்கையின் “கல்வி மற்றும் சமத்துவம்” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு
சென்னையில் THE WEEK பத்திரிக்கையின் சார்பில் நடைபெற்ற, “TAMILNADU LEADERSHIP SUMMIT, The way forward” நிகழ்வில், தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து மிக முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
குறிப்பாக, “கல்வி மற்றும் சமத்துவம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , The Week இதழின் Chief of Bureau (Chennai) லட்சுமி சுப்ரமணியன் கலந்துரையாடினர்.
இந்த அமர்வில் சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவம், சமத்துவத்தின் அவசியம், திறன்மேம்பாடு, AI-இன் (செயற்கை நுண்ணறிவு) பங்கு, குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு & வழிகாட்டுதல்கள், லட்சியங்களை நிர்ணயிப்பதற்கான ஊக்கம், மற்றும் நம்மவர் படிப்பகங்கள் உள்ளிட்டவை குறித்து, தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தாழமிக்க சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான, நம் கட்சியின் தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கும் ஒரு களமாக இந்த நிகழ்வு அமைந்தது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.