ஊர் தோறும் ரோட்டரி !
ஆக-23 அன்று, தேனி குன்னூர் பாலம் அருகே தேனி ரோட்டரி கிளப் சங்கத்தின் பெயர்ப்பலகையை திறப்பு விழா மற்றும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் அர்ப்பணிக்கும் விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் பங்கேற்று சிறப்பித்தார்.
ரோட்டரி என்றாலே அது கோடீஸ்வரர்கள் மட்டுமே பங்குபெறும் மனமகிழ் மன்றம் என்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவிவரும் நிலையில், நம்மை உயர்த்திய சமூகத்திற்கு நம்மால் இயன்ற நல்ல காரியங்களை முன்னெடுப்போம் என்ற நோக்கில் ரோட்டரியின் செயல்பாடுகளை வடிவமைத்து வருகிறார், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களுள் ஒருவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.




Comments are closed, but trackbacks and pingbacks are open.