திருச்சியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு !
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்து நேரில் கள ஆய்வு செய்ய ஆய்வுக் குழுவினர் வருகை தர உள்ளனர். இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில்
தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள கழகச் சட்டத்துறை செயலாளர் இரா. கிரிராஜன் எம்.பி. மற்றும் மாணவர் அணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் அடங்கிய கள ஆய்வுக் குழுவினர், திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று தொகுதிகளில் கீழ்க்கண்டவாறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
திருவெறும்பூர் தொகுதி
நாள்: 25/05/26
நடைபெறும் இடம்
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகம்
திருச்சி கிழக்கு தொகுதி
நாள்:26/05/26
நடைபெறும் இடம்
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகம்
மணப்பாறை தொகுதி
நாள் 27/05/26
ஹார்மோன்ஸ் மண்டபம் மணப்பாறை
ஆய்வு அட்டவணை:
கள ஆய்வுக் குழுவினர் அந்தந்தத் தொகுதிகளுக்கு வருகை தரும் போது, கீழ்க்கண்ட முறையில் கருத்துக்கேட்புப் பணிகள் நடைபெறும்.
காலை வேளையில் அந்தந்தத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கழகத் தொகுதி பார்வையாளர்கள், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும்.
மதியத்திற்கு மேல்: கழகச் சார்பு அணிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறும்.
தொடர்ந்து கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2) ஆகியோருடன் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்.
முக்கிய குறிப்புகள்:
நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்குரிய தகவல்களை முறையாகப் பெற்று, தவறாமல் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
கள ஆய்வு நிகழ்வுக்கு வரும்போது கட்டாயம் ‘மினிட் நோட்டு’ எடுத்து வர வேண்டும். அனைத்து நிகழ்வுகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த ஆய்வுக் கூட்டமானது கட்சிப் பணிகளைச் சீரமைக்கவும், தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யவும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.