கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்..

0

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்..

சரத்குமார், ராதாரவி ஆகியோரின் பிடியில் சிக்கியிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை 2016-ல் நடந்த தேர்தல் மூலம் கைப்பற்றியது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. பதவி ஏற்றதுமே நடிகர் சங்கத்தில் நடந்த பணமோசடிகள் குறித்து ஆராயத் தொடங்கினார் விஷால்.

அதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம் அருகே வெங்கம்பாக்கத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான 26 செண்ட் நிலத்தில் சில செண்ட் நிலங்களை ஃபோர்ஜரி டாக்குமெண்டுகள் மூலம் சரத்தும் ராதாரவியும் விற்று சில கோடிகளை ஏப்பம் விட்டுவிட்டதாக காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார் விஷால்.

அப்போதிருந்த அதிமுக ஆட்சியில் தங்களுக்கு இருந்த செல்வாக்கால் தப்பிய சரத்தும் ராதாரவியும் இப்போது வரை தப்பியபடி தான் உள்ளனர். அந்த நில விவகாரத்தை அதற்குப் பின் விஷாலும் கண்டு கொள்ளவில்லை.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.