காரில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்கா ! வளைத்துப் பிடித்த கரூர் போலீசார் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், தோகமலை காவல் நிலைய சரகத்தில் 19.08.2025 ஆம் தேதி மதியம் தோகமலை அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் காவல் உதவி ஆய்வாளர்  பாலசுப்பிரமணியன் என்பவர் காவலருடன் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக RJ 16 CA 9776 என்ற பதிவு எண் கொண்ட TATA Punch காரை ஓட்டி வந்த கோத்ராம் படேல், வயது 32, த/பெ தலராம், போஸ்ட் நிம்பாலா, அகோர், ஜலோர், ராஜஸ்தான் மாநிலம் என்பவரை நிறுத்தி, அவர் வந்த காரை சோதனை செய்தபோது,

கோத்ராம் படேல்
கோத்ராம் படேல்

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காரில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 10.800  கிலோ கிராம் மற்றும் பணம் ரூ. 2,06,000/- இருந்ததால், அவற்றை கைப்பற்றி மேற்படி நபர் மீது தோகமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறப்பாக பணிபுரிந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றியமைக்காக தோகமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா அவர்கள் பாராட்டினார்கள்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.