“ராஷ்மிகாவை ரொம்பவே மிஸ் பண்றேன்”–‘புஷ்பா-2’ அல்லு அர்ஜுன் ஜாலி ஃபீலிங்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புஷ்பா-2′ ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நவம்பர் 24-, ஆம் தேதி இரவு சென்னை  தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப்  படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடந்த கல்லூரி முழுவதும் ‘புஷ்பா2’ தீம்மால் அலங்கரித்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில்  அல்லு அர்ஜூன் ‘வணக்கம் தமிழ் மக்கள்’ என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் முழுவதுமாக தமிழிலேயே பேசி அசத்தினார். சென்னையில் தனது சிறுவயது மற்றும் பள்ளிப்பருவ ஞாபகங்களை நெகிழ்வுடன் பகிர்ந்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

'புஷ்பா-2'
‘புஷ்பா-2’

கடந்த இருபது வருடங்களாக சென்னையில் தனக்காக ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது.  அது ‘புஷ்பா-2’ மூலம் நிறைவேறி விட்டது என மகிழ்வுடன் சொன்னார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லு அர்ஜூனிடம் சிறுவயதில் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அவர் செய்து காட்டிய ஸ்டைல் மூவ்மெண்ட் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தை தான் குறிக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்ந்த கொண்ட அல்லு அர்ஜூன், ”கடந்த நான்கு வருடங்களாக ‘புஷ்பா2’ செட் எனது வீடு போல மாறிவிட்டது. மற்ற படங்களுக்காக நான் சென்றாலும் அங்கு ராஷ்மிகாவை மிஸ் செய்த ஆரம்பித்தேன். அந்த அளவிற்கு எங்களுக்குள் நல்ல நட்பு மலர்ந்திருக்கிறது” என்றார்.

நடிகை ஸ்ரீலீலா குறித்து பாராட்டி பேசும்போது, “அவர் அற்புதமான டான்ஸர். ஒவ்வொரு முறையும் அவரின் நடனத் திறமையை பார்க்கும்போது அவருக்கு இணையாக நானும் எனது நடனத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்” என்றார்.

Flats in Trichy for Sale

நடிகை ஸ்ரீலீலா இயக்குநர் சுகுமார் பற்றி பேசும் போது “நாடு முழுவதும் நாங்கள் படத்தை புரமோட் செய்யும் பணியை செய்து வருகிறோம். நாங்கள் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அதே வேளையில் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக அங்கு கடும் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குநர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் சார் அப்போது ‘ஆர்யா’ படத்துடன் வந்தார். ‘ஆர்யா’ படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது வாழ்க்கையிலும் முன்னேற்றித்திலும் சுகுமார் சாருக்கு பெரிய பங்குண்டு. ரசிகர்கள் நீங்கள் கொடுக்கும் அன்புதான் என் உயிர்நாடி. சீரான இடைவெளியில் தரமான படங்களை உங்களுக்கு வழங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருமே திரையரங்கில் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கவுள்ளார்கள். நானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சேர்ந்தால் நிச்சயம் ஸ்பெஷல் மேஜிக் எப்போதும் இருக்கும். ‘புஷ்பா2’ படத்தை இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்திய தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கும் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், கல்பாத்தி அகோரம் சாருக்கும் நன்றி” என்றார்.

அர்ச்சனா கல்பாத்தி ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “அல்லு அர்ஜூன் எப்போதுமே சூப்பர் ஸ்பெஷல். அதனால்தான், அவருக்கு இவ்வளவு ரசிகர்கள். ‘புஷ்பா2’ படம் வெளியானதும் அவர் நேஷனல் ஸ்டாரில் இருந்து இண்டர்நேஷனல் ஸ்டார் ஆவார். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகரிப்பார்கள்” என்றார்.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.