கொ** குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை, 2 இலட்சம் அபராதம் !
கரூர் மாவட்டம், கரூர் ஊரக உட்கோட்டம், க.பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு சம்மந்தமாக க.பரமத்தி காவல் நிலைய குற்ற எண்.115/2022-படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கானது கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.
01.06.2026 ஆம் தேதி இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வக்குமார், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோருக்கு கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆயுள் தண்டணையும், இரண்டு லட்சம் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 4 வருடம் கடுங்காவல் தண்டணையை ஏக்காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
மேற்படி மூன்று குற்றவாளிகளும் 01.06.2026 திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கை சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த் காவல் ஆய்வாளர், க.பரமத்தி காவல் நிலையம். மற்றும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்திய க.பரமத்தி காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.









Comments are closed, but trackbacks and pingbacks are open.