ஏக்கருக்கு ஆயிரம் மரக்கன்றுகள் ! திருச்சி காவேரி மருத்துவமனையின் முன்னெடுப்பு !
திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் ஜோசப் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் இணைந்து, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பத்தாயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கான இலக்குடன் குறுங்காடுகள் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
காவேரி மருத்துவமனையின் நர்சிங் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர்.
இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனையின் இயக்குனர் அன்புச்செழியன், தூய வளனார் கல்லூரி ரெக்டர் Dr. பவுல்ராஜ், ஜோசப் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குநர் Dr. பால்ராஜ், பொருளாளர் ஆண்டனி இனிகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலர் வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை சீராக்கும் நோக்கில்தான் இந்த குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக காவேரி மருத்துவமனை குழுமத்தின் சார்பில் தெரிவிக்கிறார்கள்.
— தினேஷ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.