ஊடக வெளிச்சம் இல்லாததால் … கிடப்பில் இருக்கிறது !
உழைப்பை வாங்கிக்கொண்டு உரிய ஊதியம் கொடுக்காமல் தொழிலாளிகளை வீதியில் நிறுத்தியிருக்கிறது Strategy நிறுவனமான மெய்நிகர்.
சென்னை தேனாம்பேட்டையில் அலுவலகம். மாதக்கணக்கில் ஊதிய நிலுவை என்று போராடத் தொடங்கியுள்ளவர்களுக்கு
“ஊடக வெளிச்சம்” இல்லாததால் விஷயம் அப்படியே கிடப்பில் இருக்கிறது.
பட்டதாரி இளைஞர்கள், பல்வேறு ஊடகங்களில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய பழுத்த அனுபவசாலிகள் என பாதிக்கப்பட்டோர் பட்டியல் நீள்கிறது.
மீடியாக்களில் பணியாற்றி ஊதிய நிலுவை இருந்தால் சங்கங்கள் களத்தில் இறங்கும். இவர்களைக் காப்பாற்ற எப்போதும் போல நாம் எதிர்பார்த்துக் கிடப்பது சிலரைத்தான்.
இடதுசாரி தோழர்கள், பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற போராளி இயக்கங்கள் -கட்சிகள், இவர்களின் கண்ணீரைத் துடைக்க முன் வருவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற பணிகளுக்கான “பாதுகாப்பு நெறிமுறைகள்” இதுதான் என சட்டப்பூர்வமாக முன்னெடுக்க வழிவகை காண வேண்டும்.
ந.பா.சேதுராமன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.