அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி – மேல்நிலை பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் நியமனம் மற்றும் அறிவுரைக் கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

முதன்மைக் கல்வி அலுவலகம், திருச்சிராப்பள்ளி-08, மார்ச் / ஏப்ரல் 2025, மேல்நிலை பொதுத் தேர்வு- திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்ட அளவில் அறைக்கண்காணிப்பாளர் நியமனம் மற்றும் அறிவுரைக் கூட்டம் நடைபெறுதல் குறித்த செய்திக்குறிப்பு.

மார்ச் / ஏப்ரல் -2025 மேல்நிலை முதலாமாண்டு தேர்வு 05.03.2025 முதல் 27.03.2025 வரையிலும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெற உள்ளது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேல்நிலை முதலாமாண்டில் 31225 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 32335 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடைபெறும் நாளன்று 34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள் மற்றும் 21 கூடுதல் துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும், 220 பறக்கும் படையினர் தேர்வு நல்லமுறையில் நடைபெறுவதை உறுதி செய்ய நியமனம் பெற்றுள்ளனர். 25022025 மற்றும் 26.022025 ஆகிய இரு தினங்களில் திருச்சி மற்றும் இலால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கான அறைக்கண்காணிப்பாளர் நியமனம் திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தை சார்ந்த 70 தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையங்களுக்கு உண்டான அறைக்கண்காணிப்பாளர்களை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்தனர்.

இலால்குடி கல்வி மாவட்டத்தை சார்ந்த 61 தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையங்களுக்கு உண்டான அறைக்கண்காணிப்பாளர்களை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்தனர். மேலும், திருச்சி கல்வி மாவட்டத்தில் 1023 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இலால்குடி கல்வி மாவட்டத்தில் 621 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர். திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் 1644 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர். அறைக்கண்காணிப்பாளர்களுக்கு அவரவர் பள்ளிக்கு நியமன ஆணை தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டது. சொல்வரை எழுதுபவர்(Scribe) 720 (12ம் வகுப்பு 324 Tம் வகுப்பு 396) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்று 27,022025 பறக்கும்படை உறுப்பினர்களுக்கு தேர்வுத் துறையின் மூலம் பெறப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டது.

அறைக் கண்காணிப்பாளர் அறிவுரைக் கூட்டம், திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மற்றும் இலாக்குடி கல்வி மாவட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) அறைக்கண்காணிப்பாளர் பணி குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். மேலும், மாணவர்கள் தேர்வு நேர்மையான முறையிலும், அச்சமின்றியும் தேர்வு எழுத வேண்டும் என திருச்சிராப்பள்ளி, முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வலியுறுத்தினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.