திருச்சி புனித வளனார் கல்லூரியில் – ”தொழில்நுட்பம் தலைமைத்துவம் மற்றும் நிலைத்தன்மை” வலியுறுத்தும் தேசிய மாநாடு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி, ஜனவரி 31, 2025 – சிவானி கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர்  செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகவியல் துறை புனித வளனார் கல்லூரி தன்னாட்சி திருச்சிராப்பள்ளி  நடத்திய வணிகத்தில் தொழில்நுட்பம் தலைமைத்துவம் மற்றும் நிலைத்தன்மையின் பங்கிற்கான தேசிய மாநாட்டை கல்லூரியின் ஜுபிலி அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல்; சே ச கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர்  மரியதாஸ் சே ச  மற்றும் செயலர் அருள்முனைவர்  அமல்  சே ச ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் முன்னணி கல்வியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்ற இந்த மாநாடு வரவிருக்கும் வணிக வளர்ச்சி போக்குகளை ஆராய்கின்றது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தொழில்நுட்பம் தேசிய மாநாடுஇதில் சிறப்புரை ஆய்வுக் கட்டுரை வாசிப்பு மற்றும் குழு விவாதங்கள் இடம்பெற்றன  முக்கிய உரையாளர்களாக டாக்டர் அருண் பாலகிருஷ்ணன் எம்.பி சமத்துவ குறியீட்டின் தாக்கத்தைப் பற்றியும் போட்டித்திறனை பற்றியும் உரையாற்றினார் டாக்டர் ஆனந்த்ராஜ்  சூழலுக்கேற்ப பொறுப்பான உற்பத்திக்கு பசுமை தலைமைத்துவம் குறித்து பேசினார் மற்றும் டாக்டர் பாலாஜி தொழில் பரிமாற்றத்தில் பொருட்களின் இணையம் மற்றும் செயற்கை நுண்அறிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார் .

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ஆய்வுக் கட்டுரை வாசிப்பில் முனைவர்  ராஜ்குமார் மற்றும்  லூயிஸ் விக்டர் ஆகியோர் பங்கேற்றனர் மாநாட்டின் நிறைவுரையை திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர்  ராஜப்பா வழங்கினார்.  இதில் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் நிலையான தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டன செயற்குழு கல்லூரியின் மானியர்கள் கருத்தரங்கில் ஏற்பட்ட அறிவார்ந்த விவாதங்கள் மற்றும் பங்கீடுகளை பாராட்டினர்.

இந்த மாநாடு தொழில்நுட்பம் தலைமைத்துவம் மற்றும் நிலைத்தன்மையின் இணைப்பைப் பிரசன்னமாக காட்டி எதிர்கால ஆராய்ச்சி மற்றும் கொள்கை வடிவமைப்புக்கு வழிவகுக்கும் வணிக மேம்பாட்டிற்கு தூண்டுதலாக அமைந்தது மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்  ஜான் மற்றும் முனைவர்  அகஸ்டின் ஆரோக்கியராஜ் ஒருங்கிணைப்பாளர்   வினோத் குமார் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் முனைவர்  பெர்க்மன்ஸ் துணை முதல்வர் முனைவர்  ராஜேந்திரன் இணை முதல்வர் துணை முதல்வர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் பல முதுநிலை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

ராஜஸ்தான் கேரளா கர்நாடகா பஞ்சாப் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இணையவழி மற்றும் நேரடி முறையில் 420 பேர்கள் இதில் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை பணிமுறை 2 இதை ஏற்பாடு செய்திருந்தது.

 

—  அங்குசம் செய்திகள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.