25 கல்லூரிகளில் இன்ஜினியரிங் ஒரு மாணவர் கூட சேரவில்லை !

0

25 கல்லூரிகளில் இன்ஜினியரிங் ஒரு மாணவர் கூட சேரவில்லை !

 

தமிழகம் முழுவதும் உள்ள 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான சிறப்பு பிரிவு, பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

 

https://businesstrichy.com/the-royal-mahal/

முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது.  இதில் 10 ஆயிரத்து 340 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து, தங்களுக்கு பிடித்த கோர்ஸ், கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

 

2ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25 தேதி தொடங்கி கடந்த 13ம் தேதி வரை நடந்தது. இதில் 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பொதுப்பிரிவில் 18 ஆயிரத்து 521 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 1,426 இடங்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 947 இடங்கள் நிரம்பி இருந்தன.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

3ம் கட்ட கலந்தாய்வு  கடந்த அக்டோபர் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 54 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் பொது பிரிவில் 24 ஆயிரத்து 727 இடங்களையும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3 ஆயிரத்து 293 இடங்களையும் தேர்வு செய்தனர். மொத்தமாக 3 சுற்று கலந்தாய்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை இன்ஜினியரிங் படிப்புகளில் 58 ஆயிரத்து 307 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

 

பிஇ கலந்தாய்வு தொடங்கியது முதலே சிறப்பு பிரிவுகள் மற்றும் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் முக்கிய கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.

அதுவும் 30 முதல் 40 சதவீத கல்லூரிகளே 80 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை முடித்துள்ளது. மற்ற கல்லூரிகளை மாணவர்கள் இதுவரை தேர்வு செய்யவில்லை. இதனால் 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான இடங்கள் காலியாகவே உள்ளது.

 

இந்நிலையில், 4வது சுற்று கலந்தாய்வு 29.10.2022 முதல் தொடங்கி இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

50-100% இடங்கள் நிரம்பிய கல்லூரிகள்

சிக்ரி காரைக்குடி 100 % இடங்கள்.
பி.எஸ்.ஜி 100% இடங்கள்.
சென்னை கட்டிட கலை கல்லூரி 100% இடங்கள்.
33 கல்லூரிகளில் 90% இடங்கள்.
114 கல்லூரிகளில் 50% இடங்கள் நிரம்பியுள்ளன.

25 கல்லூரிகளில் 1 மாணவர்கள் சேர வில்லை…..

இந்நிலையில் கடந்த 3 சுற்று முடிவில் 25 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.