மதுரை போலீஸ் நிரந்தர பணி நீக்கம் ! எஸ்.பி உத்தரவு !

0

மதுரை மாவட்ட காவலர் ஒருவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் 1559 தினேஷ் என்பவர் இடப் பிரச்சினை சம்பந்தமாக எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதன் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக காவல் பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை காவல்நிலையத்தில் வேலை பார்த்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.இவரது தம்பி தினேஷ் (33) மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். இவர்களின் குடும்பத்தினருக்கும் சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றும் அதே ஊரை சேர்ந்த வடிவேலன் (40) என்பவருக்கும் ஏற்கனவே ஒரு இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரிட்டாபட்டி சாலையில் காரில் வடிவேலன் வந்தபோது ஆண்டிக்கோவில் அருகே கும்பல் ஒன்று அந்த காரை வழி மறித்து காரின் மீது கல்லை தூக்கிப் போட்டு கத்தியால் காரின் மீது குத்தி கொலை செய்ய முயன்றனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த சம்பவங்கள் வடிவேலின் காரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது இந்த காட்சிகளின் அடிப்படையில் வடிவேலன் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலூர் காவல்துறையினர், ஜெகதீசன் மற்றும் தினேஷ் ஆகிய சகோதரர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் காவலர் மீது துறை தினேஷ் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக காவல் பணியில் இருந்து தினேஷ் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்

ஷாகுல்
.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.